• திருஞானசம்மந்தர்
    Thirugyanasambandhar
    அப்பர்
    Appar
    சுந்தரர்
    Sundarar
    மாணிக்கவாசகர்
    Manikkavasakar
Next Pradosham on: Sun May 5 2024
Temple News
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி
பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். சித்ரா பவுர்ணமியான நேற்று காலை, 7:52 மணி முதல் இன்று காலை, 8:48 மணி வரை, திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. திருப்பள்ளி எழுச்சியும், கோ பூஜையும் நடந்தது. மூலவர் அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை, 3:00 மணி முதல், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்தனர். பொது தரிசனம் செய்ய, நான்கு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்றனர். இதனால், 14 கி.மீ., துாரம் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.